அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Thursday 13 June 2013

ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -1

உடற்பிணி ,உயிர்ப்பிணி நீக்கி
ஊன உடலை ளியுடல்
ஆக்கும் இரகசியம்




அளிப்பவர்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்




அடைந்தறிவித்தவர்
அருட்பிரகாச வள்ளலார்




தொகுத்தவர்
சன்மார்க்க சித்தர்
சாரம் அடிகள்











முன்னுரை

அனைவரின் உடல் எதனால் ஆகியுள்ளது ?
  
          அனைவரின் உடலும் 1.ரசம் ,2.ரத்தம் ,3.தசை ,4.கொழுப்பு ,5.எலும்பு ,6.மஜ்ஜை ,7.சுக்கிலம் என்னும்   அசுத்த பூத காரிய தாதுகளால் ஆகியுள்ளது 

அதற்கு காரணம் என்ன ?

          அசுத்த பிரகிருத்தி அணுக்களே அதற்கு காரணம் 

 அசுத்த பிரகிருத்தி அணுக்களால் ஆன உடலுக்கு என்னென்ன துன்பங்கள் வரும் ?
     
            உடற்பிணிகள் 4448,உயிர்பிணிகள் 448, உளபிணிகள் 48,மரணப் பெரும் பிணி 8ம் வருகிறது .வரும் !

 அசுத்த பூத  காரிய அணுக்களை எவ்வாறு சுத்த பூத காரிய
அணுக்களாக்குவது ?

                 அதற்கு என ஓர் உபாயம் உள்ளது .அதை சித்தர்கள் அறிந்தனர் .அவ்வழியில் சமீபத்தில் வந்த வள்ளலார் தன்னுடலை ஒளியுடல் ஆக்கினார் .அதை நமக்கு தெளிவாக கூறியுள்ளார் .அதை நடைமுறைப்படுத்தும் ப ய் ற சி நாம் உலகமெங்கும் நடத்தி வருகிறோம் .அவைகளை பற்றிய குறிப்புகளை இந்நூலில் நாம் தொகுத்தளித்துளளோம் .











இதற்கான உபாயம் யாது ?

     

1.இவ்வுடலை ஒளியுடலாக்கும் சுத்த சத்துவ ஆகாரா ரகசியம்
2.இந்திரிய கரண ஒழுக்கத்தால்  ஒளியுடலாக்கும் ரகசியம்
3.இறையருளால் ஜீவ ,ஆன்ம  ஒழுக்கங்களைக் கடைபிடித்து ஒளியுடலாக்கும் ரகசியம்
4.இரக்க குணமான   ஜீவகாருண்யத்தால்  ஒளியுடலாக்கும் ரகசியம்
5.இறைவனை தோத்தரித்து  ஒளியுடலாக்கும் ரகசியம்
6.இவ்வுடலில் இயங்கும் பிரணானால்  ஒளியுடலாக்கும் ரகசியம்
7.இவ்வுலகில் விசார வசதராக இருந்தே  ஒளியுடலாக்கும் ரகசியம்
8.இவ்வுலகில் உறக்கத்தை குறைத்தே  ஒளியுடலாக்கும் ரகசியம்
9.இறை ஓளி வழிபாட்டால்  ஒளியுடலாக்கும் ரகசியம்

    எனும் நவவழிகளை கடைபிடித்து நம் தேகத்தை மாற்றும் ரகசியத்தை இதில் காண்போம் .இவ்வகைகளில் எந்த ஒன்றையாவது கடைபிடித்து ஒளி தேகம் பெற வாருங்கள் என் அழைகின்றோம் 

இவண் 

சாரம் அடிகள் 
94430 87944



( தொடரும் )
  


No comments:

Post a Comment