அருட்பெருஞ் ஜோதி அற்புதக்கடவுளுக்கு ,
அடியேங்கள் சரணம் ! சரணம் !!
தனிப்பெருங் கருணை தனித்தலைமைப் பதிக்கே ,
அடியேங்கள் சரணம் ! சரணம் !!
தாங்கள் அதிஅற்புதராகவும் அருட்பெருஞ்ஜோதியராகவும் ,
தாங்களே அமலராகவும் ,நிமலராகவும் ,
தாங்களே ஆதியராகவும் , அனாதியராகவும் ,
தாங்களே இயற்கை உண்மையராகவும் ,இயற்கை அறிவினராகவும்
தாங்களே இயற்கை இன்பினராகவும் , இயற்கை வண்ணங்களாயும்
தாங்களே எல்லாமானவராகவும் ,எல்லாமுடையவராகவும் ,
தாங்களே எகராகவும் ,அனேகராகவும்,
தாங்களே சற்குணராகவும் ,நிற்ககுணராகவும்,
தாங்களே சத்தியராகவும் ,நித்தியராகவும்,
தாங்களே நிரதிசியராகவும், எக்காலத்தும் உள்ளீர்கள்
தங்களின் பொற்பாத கமலங்களுக்கே சரணம் ! சரணம் !!
தாங்கள் எல்லாச்சக்திகளுக்கும் , எல்லா சத்தர்களுக்கும்,
தாங்கள் எல்லா மூர்த்திகளுக்கும், எல்லா மூர்த்தர்களுக்கும்,
தாங்கள் எல்லா தேவிகளுக்கும் ,எல்லா தேவர்களுக்கும் ,
தாங்கள் எல்லா தத்துவிகளுக்கும் ,எல்லா
தத்துவங்களுக்கும் ,
அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில்,
தமக்கு எந்த விதத்தினாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாத
தனிபெரும்தலைமை அருட்பெருஞ் ஜோதியாகி என்றும் எங்கும்
தாங்களே விளங்கியருளுகின்றீர்கள்.
தங்களின் பொற்பாத கமலங்களுக்கு சரணம் ! சரணம் !!
இயற்கை உண்மை தனிப்பெரும்பதியாகிய கடவுளே சரணம் !
தங்களின் அருளால் , இவை அனைத்தையும் தொகுக்கின்றோம்
.இதைப்படித்து சிந்தித்து ,தெளிந்து ,நிஷ்டைகூடி அனைத்த
ஆன்மாக்களுக்கும்
இவ்வுலக போகங்களையும் , அவ்வுலக இன்பங்களையும் ,எவ்வுலக
சித்தி இன்பங்களையும் இன்று முதல் பெற்று வாழ்வாங்கு வாழ
அருள்சேய்யும்படி விண்ணப்பிக்கின்றோம்
இவண்
சாரம் அடிகள்
94430
87944
No comments:
Post a Comment